உயிர்க்குமா சுவடுகள்

ராணி சம்பந்தர்

எப்பெப்ப ஜெனிவா கூடுமோ
அப்பப்ப தலைதூக்கும் சேதி
சொற்ப விடயம் வெளியில
மிச்சம் எச்சமோடு எச்சமாய்
மீண்டும் புதைந்திடும் சங்கதி

கச்சிதமா தொடங்கிப் பிச்சுப்
புடுங்கி மூச்சு முட்டி அடங்கி
உக்கினதைக் கிளறிக் கிளறி
வைச்சு வைச்சு நச்சினைத்
தைச்சுத் தைச்சுப் பொச்சடிக்க

இதுவரை கிடையாத ஒரு நீதி
அதுவரை கொந்தளிக்கும் அநீதி
கொதிக்கும் உள்ளமதில் மாண்டவர்
மீண்டும் தழைத்திடினும் எப்பவுமே
கிடையாத ஒன்று உயிர்க்குமா
சுவடுகள் என்பது கிடையாததே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading