கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

ராணி சம்பந்தர்

எப்பெப்ப ஜெனிவா கூடுமோ
அப்பப்ப தலைதூக்கும் சேதி
சொற்ப விடயம் வெளியில
மிச்சம் எச்சமோடு எச்சமாய்
மீண்டும் புதைந்திடும் சங்கதி

கச்சிதமா தொடங்கிப் பிச்சுப்
புடுங்கி மூச்சு முட்டி அடங்கி
உக்கினதைக் கிளறிக் கிளறி
வைச்சு வைச்சு நச்சினைத்
தைச்சுத் தைச்சுப் பொச்சடிக்க

இதுவரை கிடையாத ஒரு நீதி
அதுவரை கொந்தளிக்கும் அநீதி
கொதிக்கும் உள்ளமதில் மாண்டவர்
மீண்டும் தழைத்திடினும் எப்பவுமே
கிடையாத ஒன்று உயிர்க்குமா
சுவடுகள் என்பது கிடையாததே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading