கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

வியாழன் கவிதை …2195!!

உயிர்க்குமா சுவடுகள்!!

செம்மணி தன் வயிற்றுள்
செரிக்காது இருந்திட்ட
எம்மவர் உடலங்கள்
உலகின் முன் காட்சியாய்
சாட்சியமாய் இயம்பி விட்ட
சிப்பாய் தன் கூற்று
மெய்யாகிப் போனதே
உயிர் கொன்று போகுதே..

பிஞ்சுகள் தொட்டு
பள்ளிப் பிள்ளைகள் வரை
எத்தனை எத்தனை
மனம் பித்தென ஆகுதே
மனம் முற்றிய மனிதர்
ஆடிய பேயாட்டம்
காவு கொண்ட உடலம்
இன்னும் அகழ்வினில்
இதயத்தைக் கொல்லும்..

உலகின் முன்னே
நீதி தான் கேட்டார்
அணையா விளக்கு
போராட்டத்தை ஆக்கினார்
தொடர்கதை இதுவோ
தொல்லை விலகுதல் இல்லையோ
இறைவா நீயும் சும்மா
இருத்தல் தான் முறையோ..
சிவதர்சனி இராகவன்
21/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading