” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

வியாழன் கவிதை …2195!!

உயிர்க்குமா சுவடுகள்!!

செம்மணி தன் வயிற்றுள்
செரிக்காது இருந்திட்ட
எம்மவர் உடலங்கள்
உலகின் முன் காட்சியாய்
சாட்சியமாய் இயம்பி விட்ட
சிப்பாய் தன் கூற்று
மெய்யாகிப் போனதே
உயிர் கொன்று போகுதே..

பிஞ்சுகள் தொட்டு
பள்ளிப் பிள்ளைகள் வரை
எத்தனை எத்தனை
மனம் பித்தென ஆகுதே
மனம் முற்றிய மனிதர்
ஆடிய பேயாட்டம்
காவு கொண்ட உடலம்
இன்னும் அகழ்வினில்
இதயத்தைக் கொல்லும்..

உலகின் முன்னே
நீதி தான் கேட்டார்
அணையா விளக்கு
போராட்டத்தை ஆக்கினார்
தொடர்கதை இதுவோ
தொல்லை விலகுதல் இல்லையோ
இறைவா நீயும் சும்மா
இருத்தல் தான் முறையோ..
சிவதர்சனி இராகவன்
21/8/2025

Nada Mohan
Author: Nada Mohan