இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

« அன்றும் இன்றும் »

நேவிஸ் பிலிப் கவி இல(486)

மாதா பிதா குரு தெய்வமென்று
போற்றி மகிழ்ந்தோம் அன்று
மதிப்பின்றி மனம் போன போக்கிலே
இளைய தலை முறை இன்று

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடு நடந்தது அன்று
நல்லறிவுரை தன்னை தட்டிக் கழித்து
கண்டபடி பேசுகின்றார் இன்று

இரவு மணி பத்தானால் தூக்கம்
கண்ணைத் தழுவும் அன்று
இரவினில் ஆட்டம் போட்டு
பகலினில் தூங்குகின்றார் இன்று

அண்ணன் தம்பி உறவாக
ஓடியாடி விளையாடியது அன்று
தனியாளாய் ஓரறையில்
அலை பேசி விளையாட்டு இன்று

ஊதியக் குறைவிலும் நிறைவாய்
மகிழ்ந்து வாழ்ந்தோம் அன்று
மிகுந்த பணம் கண்டாலும்
நிம்மதி இன்றி அலைவோர் பலர் இன்று
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading