தேடும் உறவுகளே…

ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே…. 28.08.2025

தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின் உச்சக்கட்டம் உறவுகளைத் தேடும்படலம்
பாசவலையாகிக் கடந்தது பதினாறுஆண்டுகள்
தேடும் உறவுகளைத் தேடித்தேடி
தேகமே நடைப்பிணமாகிய வேளை
புதைகுழிக்குள் எச்சங்களும் உறுதியாகிட
தேடும்உறவுகளின் கனவுகளும் கானலானதே !

தேடும் உறவுகளே உம்தேகங்களை
குழிதோண்டிப் புதைத்தாலும்
உண்மைகளை உணர்வுகளை
ஒருபோதும் புதைக்க முடியாதே
ஒருநாள் நீதியின் கதவுகளை தட்டுமே ஆத்மாக்கள்
அப்போது கண்ணீருக்கும் விடைகிடைக்குமே !

எச்சங்கள் மீதமாய் கிடந்தாலும்
மிச்சமாய் துடிக்குது நியாயம் கேட்கும் இதயம்
ஒவ்வொரு எலும்பும் ஒருகதை சொல்லும்
மெளனங்கள் முழங்க உணர்வும் சாட்சியாகுமே !

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading