நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..

இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..

உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய் குளிரும்
பக்குவ பரிபாசனை..

தையிலே கதிரவன்
வையகம் தழைத்திட
வந்திடும் அருள் நிலை
வழங்கிடும் கருவினை

புன்னகை அரும்பிட
புத்தெழில் முகிழ்த்திட
வந்திடும் மூ எழுத்து
முளை விடும் இதன் வழி..
சிவதர்சனி இராகவன்
4/9/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading