கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை.

எத்தனை எத்தனையோ
கனவுகள் கண்டவேளேதனிலே

கனவுகளோ கைகூடி
வருவது போன்றே
தோன்றிய வேளையது தனிலே

கண்ணிமைக்கும்
நொடிதனிலே கண்ட
கனவுகள் அனைத்துமே
கைநழுவி சென்றதேனோ

கனவுகள் வெறும்
கனவாய் ஆனதை
நினைத்தே

இருவிழி நீரினிலே
மூழ்கியே தத்தளித்து
துடித்து இதயமோ
துண்டாய் உடைந்ததே

இந் நிலையோ – அதை
கூற வார்த்தையேதுமில்லையே
என்னிடத்திலே….

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading