” மகாகவி “

ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025

எட்டயபுரத்துக் கவிஞன்
எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன்
புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன்
பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு
அகவை முப்பத்தியொன்பதில்
அழைத்தானே காலனும் விரைந்து
புரட்டாதித் திங்கள் பதினொன்றிலே !

கன்னித்தமிழுக்கு மின்னல் வேகத்தில்
சிந்துப்பாவாலே சந்தக்கவிகளை
புரட்சிப் பாக்களாய் வடித்த புரட்சிக்கவிஞன்
தெய்வப்பற்று தேசீயப்பற்று மண்பற்றென
கவிகளை முழக்கிய கவிஞன்
கவித்திறனாலே கனல்மூட்டிய புரட்சியாளன் !

இயற்கையை நேசித்த மானிடன்
இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்து
இலகுநடையில் புதுக்கவிபடைத்த புதுமைக்கவி
வசனக்கவியை தமிழில் அறிமுகமாக்கி
கவிப்பரப்பை அழகுபடுத்திய கவிஞன்
நூற்றாண்டு கடந்தும் நினைவில் நிற்கிறார்என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading