நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

” மகாகவி “

ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025

எட்டயபுரத்துக் கவிஞன்
எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன்
புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன்
பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு
அகவை முப்பத்தியொன்பதில்
அழைத்தானே காலனும் விரைந்து
புரட்டாதித் திங்கள் பதினொன்றிலே !

கன்னித்தமிழுக்கு மின்னல் வேகத்தில்
சிந்துப்பாவாலே சந்தக்கவிகளை
புரட்சிப் பாக்களாய் வடித்த புரட்சிக்கவிஞன்
தெய்வப்பற்று தேசீயப்பற்று மண்பற்றென
கவிகளை முழக்கிய கவிஞன்
கவித்திறனாலே கனல்மூட்டிய புரட்சியாளன் !

இயற்கையை நேசித்த மானிடன்
இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்து
இலகுநடையில் புதுக்கவிபடைத்த புதுமைக்கவி
வசனக்கவியை தமிழில் அறிமுகமாக்கி
கவிப்பரப்பை அழகுபடுத்திய கவிஞன்
நூற்றாண்டு கடந்தும் நினைவில் நிற்கிறார்என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan