இசை பாடும் குயில்கள்

ராணி சம்பந்தர்

இசை பாடும் குயில்கள்
வசை பாடி வாடிய படியே
பெருவாரியாய் வேறிடம்
தேடியே பறந்து ஓடுதே

கால மாற்றம் ஆரம்பமே
கோலம் மாறிய குளிரில்
குஞ்சுகள் நெஞ்சு வருந்த
தஞ்சக் கேடால் பாடுதே

விறைக்குது விறைக்குது
கால் விரல்கள் நடுங்குது
போர்க்கப் போர்வையோ
உண்ண உணவுகளோ
எதுவுமே கேட்டாலும்
கிடையாது கிடையாதே

பார்க்கப் பாவமான எம்
போன்ற ஜீவன் இனி
இவ் உலகில் பிறக்கவே
கூடாது கூடாது அம்மா
பிறக்கவே கூடாது என.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading