பூமி

ராணி சம்பந்தர்

பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே

வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே

ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப் பொழிகிறது

அச்சு அச்சு எனத் தும்மல்
இடியாகப் பொறுக்காத
பூமியோ சுழல் காற்று வீசி
தலையைத் துவட்டுகிறது

ஆனந்தம் பொங்க மின்னல்
ஒளி வீசியே மிளிர்கின்றது
பூமித்தாய் மீண்டும் தன்னைச்
சுற்றுவதுடன் தன் குழந்தைகள்
அனைவரையும் சுற்றி மகிழ்கிறது .

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading