நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர்

பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே

வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே

ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப் பொழிகிறது

அச்சு அச்சு எனத் தும்மல்
இடியாகப் பொறுக்காத
பூமியோ சுழல் காற்று வீசி
தலையைத் துவட்டுகிறது

ஆனந்தம் பொங்க மின்னல்
ஒளி வீசியே மிளிர்கின்றது
பூமித்தாய் மீண்டும் தன்னைச்
சுற்றுவதுடன் தன் குழந்தைகள்
அனைவரையும் சுற்றி மகிழ்கிறது .

Author: