பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர்

பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே

வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே

ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப் பொழிகிறது

அச்சு அச்சு எனத் தும்மல்
இடியாகப் பொறுக்காத
பூமியோ சுழல் காற்று வீசி
தலையைத் துவட்டுகிறது

ஆனந்தம் பொங்க மின்னல்
ஒளி வீசியே மிளிர்கின்றது
பூமித்தாய் மீண்டும் தன்னைச்
சுற்றுவதுடன் தன் குழந்தைகள்
அனைவரையும் சுற்றி மகிழ்கிறது .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading