பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப் பிறத்தல்
நறவாகி நனி சிறந்து
நலம் கோடி பெறுதல்
அறம் போல இறை
வரமாய் இணைதல்
இதனாலே குலம்
நலம் கோடி பெறுதல்..
துறவாகி துணை விலகி
துயர் சுமக்கும் நிலைகள்
உதரத்தும் உதிரத்தும்
துணை மறந்த இடர்கள்
தூரத்தே தள்ளி வைத்து
ஏனிந்த கலக்கங்கள்
புலம் பெயர்வில் புலன்
இழந்தே வாடும் நிலைகள்
இன்னும் ஏனோ கண்
இருந்தும் பார்வை இலா வறுமை..
சிவதர்சனி இராகவன்
30/10/2025

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading