துறவு பூண்ட உறவுகள்

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப் பிறத்தல்
நறவாகி நனி சிறந்து
நலம் கோடி பெறுதல்
அறம் போல இறை
வரமாய் இணைதல்
இதனாலே குலம்
நலம் கோடி பெறுதல்..
துறவாகி துணை விலகி
துயர் சுமக்கும் நிலைகள்
உதரத்தும் உதிரத்தும்
துணை மறந்த இடர்கள்
தூரத்தே தள்ளி வைத்து
ஏனிந்த கலக்கங்கள்
புலம் பெயர்வில் புலன்
இழந்தே வாடும் நிலைகள்
இன்னும் ஏனோ கண்
இருந்தும் பார்வை இலா வறுமை..
சிவதர்சனி இராகவன்
30/10/2025

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading