திசை மாறும் பறவைகள்

ராணி சம்பந்தர்

உணவுப் பசியுமதிலே
குளிர் விறைப்புமதில்
தங்கியும் விடியாததில்
தாங்கவும் முடியாததில்
பொங்கி எழுந்து தஞ்சம்
கோரிட வெகு தூரமே
புரிந்து பறக்கின்றன

வானிலே பறக்கையிலே
இடையில் நிற்கவே சக்தி
இன்றி மெலிந்து இறக்கை
சோர முனகி முனகிப் பின்
குரல் மெல்லிசை பிறக்க

அம்மா நில்லுங்கோ நில்லுங்கோ
அப்பா சொல்லுங்கோ கேளுங்கோ
கீச்சுக்குரல் மூச்சிட திரும்பி வந்தே
வட்டமிட்டு விரைவாகக் கூடிடவே
திட்டமிட்டு நிரையாகச் செல்லும்
அழகு சிறகு விரிக்கும் வடிவமும்

திரிக்கும் குரல் பார்க்கும் கண்ணை
வான்வெளியில் எங்கே எனத் தேடித்
தேடித் திரும்பிப் பார்க்க வைக்கும்
அழகு திசை மாறும் பறவைகளிலே.

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading