கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

“அமைதிப்பூங்கா”

நேவிஸ் பிலிப் கவி இல(517)

பனி விழும் மலர் வனம்
பளிங்கு கல் பதித்த கல்லறைகள்
எரிகின்ற திரிகளும் வண்ண மலர்களோடு
வாசம் தரும் ஊதுபத்திகளும்

உள்ளிருப்போர் யாரோ எவரோ
நாமறியோம் தேடுகிறோம் எங்கே
எம்மோடு வாழ்ந்தோர் எங்கேயெனத்
தேடுகிறோம்

பாலூட்டி வளர்த்த அன்னையை
தோளிலே தூக்கிய தந்தை
உடன் பிறந்தரையும்
தேடுகின்றோம்

அரவணைத்த மூத்தோரையும்
அறிவுக் கண் திறந்தோரையும்
கூடிக் களித்த தோழர்களயும்
தேடுகிறோம்

சிலுவையில் காட்டும் இயேசு
இதோ இங்கே
நிலையில்லா உலகில்
இது ஒன்றே நிசம் என்கிறார்
அமைதியாய்
நன்றி…

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading