“அமைதிப்பூங்கா”

நேவிஸ் பிலிப் கவி இல(517)

பனி விழும் மலர் வனம்
பளிங்கு கல் பதித்த கல்லறைகள்
எரிகின்ற திரிகளும் வண்ண மலர்களோடு
வாசம் தரும் ஊதுபத்திகளும்

உள்ளிருப்போர் யாரோ எவரோ
நாமறியோம் தேடுகிறோம் எங்கே
எம்மோடு வாழ்ந்தோர் எங்கேயெனத்
தேடுகிறோம்

பாலூட்டி வளர்த்த அன்னையை
தோளிலே தூக்கிய தந்தை
உடன் பிறந்தரையும்
தேடுகின்றோம்

அரவணைத்த மூத்தோரையும்
அறிவுக் கண் திறந்தோரையும்
கூடிக் களித்த தோழர்களயும்
தேடுகிறோம்

சிலுவையில் காட்டும் இயேசு
இதோ இங்கே
நிலையில்லா உலகில்
இது ஒன்றே நிசம் என்கிறார்
அமைதியாய்
நன்றி…

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading