முதல் ஒலி

நகுலா சிவநாதன்
முதல் ஒலி

கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின் நல்லொலி ஆனாய்
நயமாய் கண்ட சண்ரைசின் குரலொலியே

37 வருட முதல் ஒலிநீ பரப்பி
முனைப்பாய் ஒளிர்ந்தாய் முன்னின்று
வனப்பாய் வாழ்வியல் சொல்லி வளர்ந்தாய்
வண்ணமுடன் எண்ண அலை விரித்தாய்

தங்கத்தமிழை சிரமேல் வைத்து
பங்கம் இல்லாப் பாரிலே பவனி வந்தாய்
நெஞ்சத்தில் நிறைந்த ஒலிநீயே
நேரிய கருத்துகள் விதைத்தாய் வாழி! வாழி

ஐரோப்பா கண்ட வண்ணமிகு ஒலி
வரலாறாய் ஆனதே தேன்தமிழாலே
நடா மோகன் குரலிங்கு நயமாய் ஒலிக்க
விடாமல் தொடர்கிறதே
விண்ணொலியாய் என்றும்

நகுலா சிவநாதன் 1829

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading