லண்டன் தமிழ் றேடியோ

கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ…

காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே

முப்பத்து ஏழு ஆண்டுகளாய்
கெட்பவர் மனதை
சிறைபிடித்தாய்;

உன் நிகழ்ச்சிகளின்
திறனால் வலைவிரித்தாய்
கண்ணை காக்கும்
இமைபோல கேட்பவர்
மனதை அவர் சோகம்
மறந்து முகம் மலர வைத்தாய்;

எத்தனையே வலிகளில்
தத்தளித்திடும் வேளைதனிலே
தாய்மடிபோல் வந்தாயே
என் மனதின் வலிகள்
அவை நீ தீர்த்தாயே;

கண்களில் நீர் வழிந்திட
நின்ற வேளைதனிலே
கண்களின் நீர் துடைத்தே
நெஞ்சினில் நின்மதி
தனையே விதைத்தாயே;

இதுவரை கொண்டிராத
மோகம் கொண்டேன்
உன்னிடத்தில்; என்றும்
நீங்கா காதல் கொண்டேன்
என் மனதில்…
-விண்ணவன் – குமுழமுனை….

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading