ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கார்த்திகை மாதம்

ராணி சம்பந்தர்

கார்த்திகை மாதம்
காவல் காத்திருந்து
பாரினில் வருடந்தோறும்
உருண்ருண்டு வந்திடுமே

அணையாத துயிலிலே
அரவணைக்கும் தேகம்
பிணைக்கும் உற்சாகம்
பொங்கி திரண்டிடுமே

கருமேகப் போர்வையில்
போர்த்த இருளில் மூழ்கி
முகிலோடு பிரண்டிடுமே

காந்தள் பூக்கள் பல மலர
காவிய நாயகியாய் வலமிட
கதைகள் சில திரண்டிடுமே

மனதிற்கும் மாளிகைக்குமே
இன்ப ஒளி கனிவாய் சுரந்து
துன்பம் உருண்டோடிடுமே

வாழ்விழந்து போனாலுமே
வலுவிழந்து ஆனாலுமே
பலமிழந்து போகாது ஆளும்
பதியோடு உறைந்திடுமே .

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading