“வலி கொண்ட தேசம்

நேவிஸ் பிலிப் கவி இல(534)

சிறு மழைத்துளியும்
அசைந்தாடும் தென்றலும்
சங்கமித்து சங்கீதம் பாடும்
சிங்காரச் சோலை

வனப்பான தேசம் இன்று
வளமிளந்து போனதே
வசந்த நிலமெல்லாம்
வெள்ளக் காடாயானதே

கொட்டும் மழையும் சூறாவளியும்
சுழன்றடிக்க ஆறுகள் குளங்கள்
மதகுடைத்து கரை புரண்டோட
வைகுண்ட பயணங்கள்
வழிஎங்கும் தொடர

தலைமுறை காணா
கொலைக்களமென
மணல் மேடின் சரிவில்
உடலங்கள் புதையுது

இது இயற்கை சூழலின் மாற்றமா?
மனிதனின் சுய நல ஏற்றமா ?
இருந்தும் மனித நேயம் மடியவில்லை
உதவிக்கரம்நீட்டும் மனிதத்தில்
காண்கின்றோம். மனித மாண்பை நன்றி……..

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading