“வலி கொண்ட தேசம்

நேவிஸ் பிலிப் கவி இல(534)

சிறு மழைத்துளியும்
அசைந்தாடும் தென்றலும்
சங்கமித்து சங்கீதம் பாடும்
சிங்காரச் சோலை

வனப்பான தேசம் இன்று
வளமிளந்து போனதே
வசந்த நிலமெல்லாம்
வெள்ளக் காடாயானதே

கொட்டும் மழையும் சூறாவளியும்
சுழன்றடிக்க ஆறுகள் குளங்கள்
மதகுடைத்து கரை புரண்டோட
வைகுண்ட பயணங்கள்
வழிஎங்கும் தொடர

தலைமுறை காணா
கொலைக்களமென
மணல் மேடின் சரிவில்
உடலங்கள் புதையுது

இது இயற்கை சூழலின் மாற்றமா?
மனிதனின் சுய நல ஏற்றமா ?
இருந்தும் மனித நேயம் மடியவில்லை
உதவிக்கரம்நீட்டும் மனிதத்தில்
காண்கின்றோம். மனித மாண்பை நன்றி……..

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading