மனித நேயம்

மனித நேயம்

மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே

தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே

போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே

ஏற்றம் தேவையே எங்குமே காணவே

வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்

ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்

மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே

தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே

சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்

சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்

நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே

மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது

மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்

காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்

சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading