” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனித நேயம்

மனித நேயம்

மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே

தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே

போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே

ஏற்றம் தேவையே எங்குமே காணவே

வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்

ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்

மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே

தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே

சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்

சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்

நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே

மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது

மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்

காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்

சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: