நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனித நேயம்

மனித நேயம்

மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே

தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே

போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே

ஏற்றம் தேவையே எங்குமே காணவே

வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்

ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்

மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே

தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே

சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்

சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்

நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே

மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது

மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்

காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்

சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: