பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

விசைத்தறி இவளோ……….

இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை அழகாய் படைப்பாய் தரிசனம்

ஆம் பாமுகத்தளத்தின் விசைத்தறி இவளோ
பழகிட இனிதாம் மகளாய் இவளோ
சொற்போர் தொடுத்திடும் நடாமோகனார் துணையாய்
வழித்தடம் பேணிடும் வாய்மொழி இவளோ

இளையவர் பெரியோர் இனிதென் இழைய
கணமும் கனிவுடன் தன்கடமைகள் ஒதுக்கி
வாழ்வியல் தொடரில் மொழியின் தொடுகை
திறனாய் மிளிர கை கொடுப்பவள் இவள்தாம்

வாணியின் பணியினை நிதமும் ஏற்றோம்
பொருள் நிறை உறுதுணை அழகாய் கண்டோம்
நித்தமும் மகிழ்வாய்நீடு நிறைவாய் வாழிய
வாழிய மகளே

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading