நிழலாடுதே நினைவாயிரம் 2146 ஜெயா நடேசன்

கடந்த காலம் கடந்து போனதே
நடந்த கவலை மரணம் துன்பமானதே
எதிர்காலம் என்ன நடக்கும் நினைவிலே
பயமே காரணமாக அலை மோதுதே
நிகழ்காலம் தற்போது நினைவில் வரவே
நிழலாடும் நினைவுகள் ஆயிரமானதே
நிம்மதி தேடி அலையும் மானிடமோ
உள்ளம் எனும் கதவை திறக்க வேண்டுமே
தூய்மையின் துல்லியமாய் துலங்கி நின்று
வாய்மையின் வல்லமையால் விளங்கி
குறைகளை காண்பதில் குறியாயிராமல்
நிறைகளை காண கண் திறப்போம்
சந்தித்த சவால்களுக்கு சலிக்காமல்
எதிர்ப்புகள் ஏளனங்களை எதிர்கொண்டு
அன்பின் சுனையாய் வாழ்வாங்கு வாழ்வோம்

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading