” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம் 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-01-2026

காலங்கள் கரைந்த பின்பும்
கரையோரம் ஒதுங்கும் சுவடாய்
நிமிடம் தோறும் நெஞ்சில்
நிழலாடுதே நினைவாயிரம்

குடை மடித்து மழையில் நனைந்ததும்
குதுகலமாய் சுற்றித் திரிந்ததும்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்ததும்
பாசமாய் வலம் வந்ததும்

தடுக்கி விழும் முன்னே
தாங்கிய உங்கள் கைகளும்
தனிமையை உணர்ந்ததில்லை
தமையனே உன் அரவணைப்பில்

தோல்விகள் எனை நெருங்கையில்
தோள் கொடுத்தவனே
காலனும் கவர்ந்து சென்றானோ
கனிவான அந்தச் சிரிப்பை

தந்தை பாதி, தாய் பாதியாய்
தன்னலமற்ற அன்பின் உருவமாய்
நெஞ்சம் கனக்கும் நேசமாய்
நிழலாடுதே நினைவாயிரம் அண்ணா!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading