” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம் 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-01-2026

காலங்கள் கரைந்த பின்பும்
கரையோரம் ஒதுங்கும் சுவடாய்
நிமிடம் தோறும் நெஞ்சில்
நிழலாடுதே நினைவாயிரம்

குடை மடித்து மழையில் நனைந்ததும்
குதுகலமாய் சுற்றித் திரிந்ததும்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்ததும்
பாசமாய் வலம் வந்ததும்

தடுக்கி விழும் முன்னே
தாங்கிய உங்கள் கைகளும்
தனிமையை உணர்ந்ததில்லை
தமையனே உன் அரவணைப்பில்

தோல்விகள் எனை நெருங்கையில்
தோள் கொடுத்தவனே
காலனும் கவர்ந்து சென்றானோ
கனிவான அந்தச் சிரிப்பை

தந்தை பாதி, தாய் பாதியாய்
தன்னலமற்ற அன்பின் உருவமாய்
நெஞ்சம் கனக்கும் நேசமாய்
நிழலாடுதே நினைவாயிரம் அண்ணா!

Jeba Sri
Author: Jeba Sri