சொல்லினுள் அடங்கிடாக் கவிதை

பாஸ்கரன்.க

நில்லாமல் ஓடுவதால் பூமியானவள்
மென்மைக் குணத்தாலே பூவையானவள்
எல்லையில்லா அன்பாலே அகிலம் ஆள்பவள்
சொல்லினுள்ளே அடங்காத கவிதை ஆனவள்

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

உயிர் தந்த தாயும் பெண்மை
உடனுறையும் தாரம் பெண்மை
உறவாடும் பாங்கில் மேன்மை
உணர்வோம் உம் அன்பில் எம்மை

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

இல்லறத்தின் அச்சாணி நீ
வல்லமையின் மகுடம் நீ
எல்லையில்லா ஆற்றல் நீ
எங்கும் எதிலும் ஏற்றம் நீ

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading