நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சொல்லினுள் அடங்கிடாக் கவிதை

பாஸ்கரன்.க

நில்லாமல் ஓடுவதால் பூமியானவள்
மென்மைக் குணத்தாலே பூவையானவள்
எல்லையில்லா அன்பாலே அகிலம் ஆள்பவள்
சொல்லினுள்ளே அடங்காத கவிதை ஆனவள்

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

உயிர் தந்த தாயும் பெண்மை
உடனுறையும் தாரம் பெண்மை
உறவாடும் பாங்கில் மேன்மை
உணர்வோம் உம் அன்பில் எம்மை

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

இல்லறத்தின் அச்சாணி நீ
வல்லமையின் மகுடம் நீ
எல்லையில்லா ஆற்றல் நீ
எங்கும் எதிலும் ஏற்றம் நீ

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே

Author: