” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சொல்லினுள் அடங்கிடாக் கவிதை

பாஸ்கரன்.க

நில்லாமல் ஓடுவதால் பூமியானவள்
மென்மைக் குணத்தாலே பூவையானவள்
எல்லையில்லா அன்பாலே அகிலம் ஆள்பவள்
சொல்லினுள்ளே அடங்காத கவிதை ஆனவள்

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

உயிர் தந்த தாயும் பெண்மை
உடனுறையும் தாரம் பெண்மை
உறவாடும் பாங்கில் மேன்மை
உணர்வோம் உம் அன்பில் எம்மை

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

இல்லறத்தின் அச்சாணி நீ
வல்லமையின் மகுடம் நீ
எல்லையில்லா ஆற்றல் நீ
எங்கும் எதிலும் ஏற்றம் நீ

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே

Author: