கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து உயிர் வதை தொடுக்கும்

அத்தனை பக்கமும் மாசு படுத்திடும் செயல்கள்
தொடுப்பவர் நாமே பூமிப்பந்துள் வினைத்திறனாக்கி
விளைச்சலை அழித்து வினையை வளர்த்து
அனுதின்ம் அணுக்களுள் புளுக்களாய் நுளைவோம்

போரும் வதையும் போக்கிடம் இன்றி
கந்தகப் புகைக்குள் கருகிடும் நிலையும்
சூழலைத் துவம்சம் செய்திடும் சோதனை
அழிவை எழுதிடும் ஆக்கச்செய்வினை

நாளைய உலகு தலைமுறை எழுத
நயந்து கொடுப்பது மாசும் தூணும்
விழித்து எழுந்துமுனைப்பொடு விளைந்துமாற்றத்தெறிப்பில் மறுமலர்ச்சியைத் தொடலாம்

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading