“வேரறுந்த மரங்கள்”

நேவிஸ் பிலிப் (கவி இல 607)

வைகாசி பதினெட்டு எம்
மனதில் பதித்த கல் வெட்டு
யுத்த அனர்த்தங்கள் என்றும்
மறக்க இயலா பொறித் தட்டு

பச்சை மரங்களிலே
பசும் தளிர்கள் கிளைகள்
பூவனமோஎன வியந்து பார்க்க
சிங்காரமாய் சிறகடித்த சிட்டுக்கள்

கண் மூடித் திறப்பதற்குள்
அடியோடு சாய்ந்த மரங்கள்
பூ காய்கனிகளெல்லாம் கொத்தாய்
குலையாய்அகவை எல்லையின்றி
உதிர்ந்துவிட

வரண்ட மணற் பரப்பில்
செங்குருதி ஆறாய் வ ழிந்தோட
பிணக் குவியலிடை
முகவரிகள் தொலைத்த எம்மினம்

ஆண்டுகள் கடந்திடினும்
மனதை விட்டகலா நினைவலைகள்
நெஞ்சிலே ஆறாத வடுக்களுடன்
இன்றும் ஏங்கி நிற்கும் எம்மினம்
அஞ்சலிப்போம்……………நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading