இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“வேரறுந்த மரங்கள்”

நேவிஸ் பிலிப் (கவி இல 607)

வைகாசி பதினெட்டு எம்
மனதில் பதித்த கல் வெட்டு
யுத்த அனர்த்தங்கள் என்றும்
மறக்க இயலா பொறித் தட்டு

பச்சை மரங்களிலே
பசும் தளிர்கள் கிளைகள்
பூவனமோஎன வியந்து பார்க்க
சிங்காரமாய் சிறகடித்த சிட்டுக்கள்

கண் மூடித் திறப்பதற்குள்
அடியோடு சாய்ந்த மரங்கள்
பூ காய்கனிகளெல்லாம் கொத்தாய்
குலையாய்அகவை எல்லையின்றி
உதிர்ந்துவிட

வரண்ட மணற் பரப்பில்
செங்குருதி ஆறாய் வ ழிந்தோட
பிணக் குவியலிடை
முகவரிகள் தொலைத்த எம்மினம்

ஆண்டுகள் கடந்திடினும்
மனதை விட்டகலா நினைவலைகள்
நெஞ்சிலே ஆறாத வடுக்களுடன்
இன்றும் ஏங்கி நிற்கும் எம்மினம்
அஞ்சலிப்போம்……………நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading