பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

“வேரறுந்த மரங்கள்”

நேவிஸ் பிலிப் (கவி இல 607)

வைகாசி பதினெட்டு எம்
மனதில் பதித்த கல் வெட்டு
யுத்த அனர்த்தங்கள் என்றும்
மறக்க இயலா பொறித் தட்டு

பச்சை மரங்களிலே
பசும் தளிர்கள் கிளைகள்
பூவனமோஎன வியந்து பார்க்க
சிங்காரமாய் சிறகடித்த சிட்டுக்கள்

கண் மூடித் திறப்பதற்குள்
அடியோடு சாய்ந்த மரங்கள்
பூ காய்கனிகளெல்லாம் கொத்தாய்
குலையாய்அகவை எல்லையின்றி
உதிர்ந்துவிட

வரண்ட மணற் பரப்பில்
செங்குருதி ஆறாய் வ ழிந்தோட
பிணக் குவியலிடை
முகவரிகள் தொலைத்த எம்மினம்

ஆண்டுகள் கடந்திடினும்
மனதை விட்டகலா நினைவலைகள்
நெஞ்சிலே ஆறாத வடுக்களுடன்
இன்றும் ஏங்கி நிற்கும் எம்மினம்
அஞ்சலிப்போம்……………நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading