குதூகலம் 81

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025

வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்

குயிலின் பாட்டினிலே
கடலின் அலையினிலே
மலரின் சிரிப்பினிலே
மழலையின் பேச்சினிலே

கூடவே பலவாய்
குதூகலம் குடியிருக்க
சிந்தும் புன்னகையால்
சிந்தையில் தேனூறும்

உறவுகளின் அன்பினால்
உள்ளமும் இன்பமாகும்
வாழ்வின் எதிர்காலம்
வசந்தமாய் குதூகலிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading