இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உருண்டோடும் நாளே!!

உருண்டோடும் நாளே 778

இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே

நல்லூர் முருகனின்
கார்த்திகை உற்சவம்
பார்க்க கிடைத்ததும்
மாவிளக்கு உண்டதும்

வசந்த மண்டபம்
பூசை பார்த்ததும்
முருகன் பவனிவந்த
காட்சியின் சிறப்பும்

ஆலய நாற்புறமும்
ஆரவாரமாய் கூட்டம்
கடைகள் எல்லாமே
நெரிசலில் ஒருபுறம்

முருகனின் தரிசனம்
கிடைத்ததும் மகிழ்வே
முட்டி மோதாமல்
பார்த்ததும்.சிறப்பே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading