இயந்திரமனிதர்கள்…!!

தினக்கவி-2386!! சிவதர்சனி .இரா தொழில்நுட்பம் வளர்கிறது… தொலைந்து போகிறது மனிதம்; விரல்களின் நுனியில் வையகம் சுருங்க, விழிகளின் முன்னே உறவுகள் தொலைகின்றன! கைகோர்க்கும் நட்புகள் கைபேசிக்குள்...

Continue reading

“உள்ளங் கையில் உலகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(654)

கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த காலம் அன்று

அடுப்பூதி சமைத்த காலம்மறி
கடையிலே உணவு வாங்கி
பொட்டலத்தைப் பிரித்து
அவசரமாய் அள்ளித் திணிக்கும்
காலம் இன்று

குடும்பமாய் திரைஅரங்கில்
படம் பார்த்த காலம் மாறி
தனியராய் கை பேசியில்
கண்டதையும் இரசித்து

கருத்துப் பரிமாற்றம்
பணப்பரிமாற்றம்
உறவுகளோடு உரையாடல்

தொலை பேசிமூலம்

நவீனம் தந்த வசதியிலே
சுருக்கிக் கொண்டோம் நம்மை
மகிழ்வினை தொலைத்து விட்டு
மனஅழுத்தத்தோடு வாழுகின்றோம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading