மொழியே அடையாளம்

சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும் உழைப்போம்
மனத்தினில் ஒன்றியே மகுடம் சூட்டுவோம்
அன்னை மொழியது அகிலம் அறிந்ததே
இன்பம் தருமது இளமையும் தருமே
தருமே வாழ்வும் தத்துவம் சொல்லும்
அருமை மொழியது அடையாளம் அன்றோ
நன்றாய் வாழ நாலடி யார்நூல்
அன்றே வகுத்தனர் ஆன்றோர் தானே
வாழவே வரிகள் வகுத்தார் வள்ளுவர்
தாழவே மாட்டோம் தரணியில் உயர்வோம்
கற்றதன் பயனாய்க் காய்களும் கனிகளாய்
வெற்றியே காண்போம் வெகுமதி உண்டு
மொழியே அடையாளம் மொழிந்திடச் சந்ததி
வழிவழி வளருமே வளர்பிறை நிலவாய் !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading