இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.05.2024
இலக்கம்-266
“நிர்மூலம்”
—————
மூலம் நட்சத்திரம்
பிறந்தோர்
வீடுகளில் யாவும் தொலைவு
முள்ளிவாய்க்கால் போரின் விளைவு
ஒட்டு மொத்த தமிழினம் அழிவு
எம் உறவுகளின் வீடு காணிகள் சொத்துக்கள்
அரசாங்க இராணுவத்தால் அபகரிப்பு
நெற்றி வெயர்வை நிலத்தில் சிந்த
பாடுபட்டு கடன் பட்டு கட்டிய வீடுகள்
கொத்துக் குண்டுகளால் பெரும் அழிப்பு
பயன் தரும் பனை மரங்களெல்லாம்
குண்டடித்து மொட்டைகளாக போகும் பாதையெலாம்
பார்க்க இன்றும் காட்சி
இலங்கை போர் தந்த யுத்தத்தினால்
எம் மக்களின் உயிர்கள் தொடங்கி
உடைமைகள் யாவும்
நிர்மூலமாக ஆக்கப்பட்டதின் விளைவு
வலியும் வடுவும் எம் தமிழ் இனத்திற்கே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading