தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-5.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1447
மலரட்டும் நம் நாடு
————————-
மண் வளமும் நீர் வளமும்
இயல் வளமும் இசை வளமும்
கலை வளமும் பண்பாட்டு வளமும்
கொண்ட நாடே எம் தாய் நாடு
தொன்மை மிகு தமிழ் மொழியில்
புகழ் பெற்று வாழ்ந்த எம் மூத்தோர்
மங்காப் புகழ் பெற்ற தமிழையும்
கலைகள் அத்தனையும் வளர்த்தனரே
பண்பாட்டு விழுமியங்கள் பலதை
பண்பாடாய் நிலை நிற்க உழைத்தவர்கள்
சான்றுகள் பலதையும் விட்டுச் சென்றனரே
ஒன்றாக நின்று ஒற்றுமையின் பலமாகி
உழைத்த பலர் வரலாறு படைத்தனரே
ஒளி இருந்தும் இருளை எதற்கு
வழி இருந்தும் வலி எதற்கு
துணிந்து நின்று மூத்தோர் வழி நடப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading