Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.02.2022
கவி இலக்கம்-161
மனித வாழ்க்கை
—————————–
உயிர் கொண்ட பூமி
உதிரத்தால் தோய்கிறது
இதயம் கனிந்து கசக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
கொடையென தந்த இறைவன்
காலமும் வந்து ஆட்டி படைக்கிறது
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
அவனியில் வாழ்வதற்கு
போராடியே வென்றிடுவோம்
கட்டுப்பாடுகளை கடைப்பபிடிப்போம்
வளமாக்கும் இயற்கைதனை
வாழ்வெலாம் பேணிடுவோம்
மகிழ்விக்கும் நம் வாழ்வினை
ஒற்றுமையோடு ஓட்ட பழகிடுவோம்
சிந்தித்து செயலாற்ற கற்றிடுவோம்
சீரான வாழ்க்கை அமைப்போம்
சிறப்புடனே வாழ்ந்து வளம் பெறுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading