Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.02.2022
கவி இலக்கம்-161
மனித வாழ்க்கை
—————————–
உயிர் கொண்ட பூமி
உதிரத்தால் தோய்கிறது
இதயம் கனிந்து கசக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
கொடையென தந்த இறைவன்
காலமும் வந்து ஆட்டி படைக்கிறது
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
அவனியில் வாழ்வதற்கு
போராடியே வென்றிடுவோம்
கட்டுப்பாடுகளை கடைப்பபிடிப்போம்
வளமாக்கும் இயற்கைதனை
வாழ்வெலாம் பேணிடுவோம்
மகிழ்விக்கும் நம் வாழ்வினை
ஒற்றுமையோடு ஓட்ட பழகிடுவோம்
சிந்தித்து செயலாற்ற கற்றிடுவோம்
சீரான வாழ்க்கை அமைப்போம்
சிறப்புடனே வாழ்ந்து வளம் பெறுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading