கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-30.06.2022
கவி இலக்கம்–1535
மனித வாழ்வு வளம் பெற
——————————
பிரார்த்திக்கும் கரங்களை விட
உதவும் கரங்களே உயர்வானதே
பாராட்டும் மனங்களை விட
பங்களிக்கும் கைகளளே மகிழ்வானதே
சிரிக்கும் உதடுகளை விட
சிந்திக்கும் இதயங்களே சிறப்பானதே
நோயின் பாதிப்பில் பார்ப்பதை விட
அன்பான நாலு வார்த்தை ஆறுதலானதே
சீர் தூக்கும் பார்வையை விட
இறைவனின் நம்பிக்கை பலன் தருமே
உதவும் கரங்கள் ஓராயிரம் ஓடி வரட்டும்
அபாய நாட்டில் உயிர்ப் பூக்களாக மலரட்டும்
பசியும் பட்டினியும் வறுமையும் தீரட்டும்
பத்தும் பலதுமான கரங்கள் உயரட்டும்
மலரும் உள்ளங்கள் மாண்புகள் பெறட்டும்
வாழ்வுகள் வளம்பெற நல்வழி பிறக்கட்டும்
நல்லோர் கண்கள் அகல விரியட்டும்
நம் தாயக மக்களின் வாழ்வு சிறக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading