Jeya Nadesan

கவிதை நேரம்-18.08.2022
கவி இலக்கம்-1559
பிரிவாற்றாமை
——————————-
மனிதம் தொலைந்து சுய நலம்
தாண்டவமாடும் காலமாயிற்று
நாடு விட்டு நாடு வந்தாலும்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும்
இதயத்தில் என்றும் எம் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போனது எம் பரம்பரையே
தமிழனின் நல் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு முடிவே இல்லை
நடு நிலைமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் எழும்பும்
மனித ஏக்கமதில் தொலைந்தோர் நினைவில்
இழந்த வாழ்வாக பிரிவாற்றாமை துயரில்
நியாயம் கேட்டு குரல் கொடுத்து நின்று
விடிவுக்காய் காத்து கிடக்கும் இனம்
நம் பலம் சேர்ந்து உரிமைக்காய் குரல் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading