அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-18.08.2022
கவி இலக்கம்-1559
பிரிவாற்றாமை
——————————-
மனிதம் தொலைந்து சுய நலம்
தாண்டவமாடும் காலமாயிற்று
நாடு விட்டு நாடு வந்தாலும்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும்
இதயத்தில் என்றும் எம் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போனது எம் பரம்பரையே
தமிழனின் நல் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு முடிவே இல்லை
நடு நிலைமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் எழும்பும்
மனித ஏக்கமதில் தொலைந்தோர் நினைவில்
இழந்த வாழ்வாக பிரிவாற்றாமை துயரில்
நியாயம் கேட்டு குரல் கொடுத்து நின்று
விடிவுக்காய் காத்து கிடக்கும் இனம்
நம் பலம் சேர்ந்து உரிமைக்காய் குரல் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading