” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.06.2023
கவிதை இலக்கம்-227
பசுமை
—————–
பசுமை நிறைந்த நினைவுகள்
என் மனதில் என்றும் நினைப்பு
பசுமை நிறைந்த பாடடசாலை நினைப்பு
பாடித் திரிந்து ஊர் சுற்றிய மகிழ்வு
வகுப்பில் தோழிகளுடன் செய்த குறும்பின் துடிப்பு
பாடசாலை சீவியம் பசுமை நிறை
மனதில் மறக்க முடியாத நினைப்பு
கள்ளமாக படம் பார்த்து மனதில் அடைந்த நிறைப்பு
கீரிமலை கடற்கரை சுற்றுத் திரிந்த மகிழ்வு
பணிக் காலங்களில் பசுமை நிறை கண்டி
மலையக சுற்றுலா மகிழ்வு
பச்சை பசேலென பரந்த
தேயிலை கொழுந்துகளின் வியப்பு
மாரி மழை நீர் நிலைகள் நிறைவு
வித்துக்களின் எழுச்சியின் உயர்வு
பயிராகி மரமாகி வளர்ச்சியின் சிறப்பு
வயல் வெளியில் நெல் மணிகளின் வனப்பு
பசுமை புரட்சியின் நல்ல தீர்ப்பு

Nada Mohan
Author: Nada Mohan