தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-10.08.2027
கவி இலக்கம்-1730
ஆடிக்கலவரம்
———————–
தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள்
இன வெறியர்களால் கொன்றழித்த நாள்
ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்
கதறக் கதற வெட்டி படுகொலையான நாள்
மாண்டு போன எம் இனத்தின் நினைவு நாள்
நினைவுகள் மீளும் பிரிவுகளை மறக்க முடியாத நாள்
ஒவ்வொரு வருடமும் வந்து போகும் கரிய நாள்
ஆவணி பிறந்தாலும் வருடங்கள் கடந்தாலும்
நாமும் அகப்பபட்டு பலதுமாய் அனுபவித்த நாள்
கண்டியிலே பயத்திலே முடங்கிய நாள்
குடும்பமாக வீடு வீடாக அடைக்கலம் தேடிய நாள்
கடைகளை எரித்தும் சாமான்கள் கொள்ளையடித்த நாள்
ரயர்கள் பெற்றோல் ஊற்றி எரியூட்டி சேதமாக்கிய நாள்
எம் இனத்தவர்க்கு ஆடிக் கலவரம் என்றுமே கறுப்பு யூலைதான்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading