Jeyam

திமிர்

பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில் 

மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில்

பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து 

பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து 

யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன் 

ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன் 

நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம் 

தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம் 

என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை

தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை 

கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது 

திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது 

ஜெயம் 

06-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading