கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeyam

புரிவினை அடை மனமே

மென்மையான உள்ளம் கொண்டோர் மேலோராக

வன்மத்தை மனதில் கொண்டோர் கீழோராக

அன்னை சொல்லை மதிப்போரெல்லாம் நல்லோராக

மண்ணில் அழிவை செய்வோரெல்லாம் பொல்லாராக 

கற்றோரை கனம் பண்ணுதல் முறையே

அற்றோரை ஒதுக்கி வைப்பதும் குறையே 

வற்றாத அன்பை கொண்டோரெலாம் இறையே

சிற்றறிவால் எட்டாதவொன்று குறையுமொரு நிறையே

உள்ளபொழுது ஈர்ந்தளித்தல் இதுதானே மனிதம்

எள்ளையும் எட்டாய்ப்பகிர்தல் மானுட புனிதம்

செல்வம்   வரும்போகும் வரட்டுமங்கே புரிதம் 

உள்ளத்தால் உயர்ந்தோரே

இடம்பிடிப்பார் சரிதம் 

ஜெயம்

11-03-2022

Nada Mohan
Author: Nada Mohan