கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

Kavikco Parama Visvalingam

வெறுமை போக்கும் பசுமை

பசுமையான நினைவுகளே
பட்டாம்பூச்சி உறவுகளே
பாடு பட்டோம் நாம் கழனியிலே
பகிர்ந்துண்டோம்; உலகினிலே.

குச்சு வீட்டினில் கோடிசுகம்
கோயிலைச் சுற்றி நாலு குழம்
நஞ்சை புஞ்சை தந்த வரம்
நாங்கள் என்றும் உங்கள் வசம்..

பிறந்ததும் சொட்டு மருந்துடனே
பெரும்படை ஒன்று நகர்கின்றது
பெருவாரி மக்களிற்கோ
வைத்திய விருந்து தொடர்கிறது.

கோழி ஒரு கூட்டிலே
முட்டை ஒரு கூட்டிலே
கொட்டை இல்லா பழங்களெல்லாம்
குவிந்திருக்கு கடையிலே

பசுமையைச் சுற்றிய வெம்மையினை
காணாதிருந்தவர் கருணைகொண்டார்
எருமைகள்போலே இருந்தவர்கள்
எழுந்து வணங்க தலைப்பட்டார்.

பசி எடுக்கும் முன்னாலே
பயிர் வளர்த்த தாயம்மா
உயிர் வளர்த்தோம் உன்னாலே
உனைக் காப்போம் கண்போலே.

இது உலக ஆரோக்கிய, தாவர தினம்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

https://studio.youtube.com/video/pCRSJGvFNG8/edit

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading