Kosala Ganam

சந்தம் சிந்தும் சந்திப்பு
அங்கலாய்ப்பு

ஊரின் நினைப்பு உள்ளவரை ஊசலாடி
வேரறுத்து வீசப்பட்ட விழுதுகள் நாமே
பாரினில் உறவுகள் பரந்தும் வாழ்வியலை
அழகாக நகர்த்தினாலும் அங்கலாய்ப்பு நாளுமே

மனதை வருடி மகிழ்வைக் குறைக்கும்
மருத்துவம் காசில்லை மருந்தும் விலையில்லை
சினமில்லாத சேவை சிவிலியர் பார்வை- ஆனால்
சிறப்பு எம்மூரென்று சொல்லிச் சொல்லியே

வாழ்வை நகர்ததும் வளக்கமாய்ப் போச்சு
வெந்து வெந்து வேகுவதாய்ப் போச்சு…

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading