மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

pon.tharma

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம் ,இல.534
தலைப்பு .
கறுப்பாஜி ,சிகப்பாஜி ,வெள்ளாஜி.
——————————————————
கறுப்பாஜி ,சிகப்பாஜி . கரையோர வெள்ளாஜி. (நீ )
காதல் என்றும் உன்மேலே ,கடைசிவரை மறவாதே .
கலர்களுக்குள் பேதமுண்டு ,கடமைகளில் திறமையுண்டு (உன்)
மதங்களுக்குள் பேதமுண்டு ,வெண்ணிலாக்குப் பேதமேது .

அயர்விலாது உழைத்துவிட்டால் ,அடடா அள்ளித் தருவாயே .
வியர்வை அதைச் சிந்த விட்டால் ,வெகுவாய் அள்ளிக் குவிப்பாயே .
புதைந்து (உன்னிடம் )கிடக்கும் புதையல்களைப்,புத்தியைத் தீட்டிப் பெற்றிடனும் .
மறைந்து கிடக்கும் மர்மங்களை ,மக்களுக்கெல்லாம் பகிர்ந்திடணும்

மாசில்லாத கொடையாளி ,மக்களுக்கெல்லாம் தாயே நீ .
ஆசுஅற்ற உணவு தந்து ,மூலிகைகள் பலவும் தந்து –
மக்கள் நலம் காக்கும் நீயே மகராசி .
(நீ)மனம் வைத்தால் ,குடிகள் உயரும் தனி ராசி .

மகாமாரி கண்விழித்தால் ,மலையின் உச்சி எற வைப்பா .(இந்த )
மண்ணுக்குள்ளே பொன்னைக் காட்டி ,அண்டத்தவரை மகிழவைப்பா.
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading