“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

pon.tharma

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம் ,இல.534
தலைப்பு .
கறுப்பாஜி ,சிகப்பாஜி ,வெள்ளாஜி.
——————————————————
கறுப்பாஜி ,சிகப்பாஜி . கரையோர வெள்ளாஜி. (நீ )
காதல் என்றும் உன்மேலே ,கடைசிவரை மறவாதே .
கலர்களுக்குள் பேதமுண்டு ,கடமைகளில் திறமையுண்டு (உன்)
மதங்களுக்குள் பேதமுண்டு ,வெண்ணிலாக்குப் பேதமேது .

அயர்விலாது உழைத்துவிட்டால் ,அடடா அள்ளித் தருவாயே .
வியர்வை அதைச் சிந்த விட்டால் ,வெகுவாய் அள்ளிக் குவிப்பாயே .
புதைந்து (உன்னிடம் )கிடக்கும் புதையல்களைப்,புத்தியைத் தீட்டிப் பெற்றிடனும் .
மறைந்து கிடக்கும் மர்மங்களை ,மக்களுக்கெல்லாம் பகிர்ந்திடணும்

மாசில்லாத கொடையாளி ,மக்களுக்கெல்லாம் தாயே நீ .
ஆசுஅற்ற உணவு தந்து ,மூலிகைகள் பலவும் தந்து –
மக்கள் நலம் காக்கும் நீயே மகராசி .
(நீ)மனம் வைத்தால் ,குடிகள் உயரும் தனி ராசி .

மகாமாரி கண்விழித்தால் ,மலையின் உச்சி எற வைப்பா .(இந்த )
மண்ணுக்குள்ளே பொன்னைக் காட்டி ,அண்டத்தவரை மகிழவைப்பா.
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan