ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .19.04.23
இலக்கம் -540
தாத்தாவும் நானும் .
:::::::::::::::::::::::::::::::::::::
மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் .
ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் .

வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க )
வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் .

நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு .
நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு .

அகண்ட பெருத்த நல் அழகான கண்கள் (தாத்தாவிற்கு)
ஆயிரம் விண்மீன்கள் ,தோரயமாகக் காட்டும் ,பேர்த்தியின் –
கண்கள் .
தாத்தாவும் நானுமே ,என்றும் பிரியாத பந்தம் .
(நான்)தளர்வின்றி அவரோடு ,இணைந்திட்ட சொந்தம் .
பொன்.தர்மா

முக்கிய குறிப்பு .
கவிதை ஒளி வடிவிலும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது .

Nada Mohan
Author: Nada Mohan